தமிழ்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 7 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் உட்பட, புதிதாக 7 ஆயிரத்து 817 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 69 ஆயிரத்து 372 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 305 பேர் ஆண்கள் என்றும், 3 ஆயிரத்து 512 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 455 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 362ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 904 பேரும், ஈரோட்டில் 870 பேரும், சேலத்தில் 517 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 477 பேரும், தஞ்சாவூரில் 370 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17 ஆயிரத்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 182 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 106 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 76 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version