இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்தது

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கொரோனா தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 88 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 18 ஆயிரத்திற்கு கீழும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 14 ஆயிரத்துக்கு கீழும் குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்து, நாடு முழுவதும் ஒரே நாளில் 2 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 443 பேரும் மகாராஷ்டிராவில் 300 பேரும் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Exit mobile version