தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 ஆயிரத்து 616 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 180 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 436 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 839 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 334 பேரும், விருதுநகரில், 253 பேரும், திருவள்ளூரில் 217 பேரும், திருநெல்வேலியில் 181 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version