சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 646 பேரும், தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 374 பேரும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 323 பேரும், திரு.வி.க. நகரில் 2 ஆயிரத்து 73 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் ஆயிரத்து 864 பேரும், அடையாறில் ஆயிரத்து 158 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 43 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 773 பேருக்கும், திருவொற்றியூரில் 784 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version