ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்!

ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியுமென சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தயாரித்துள்ள கண்ணாடியால் ஆன பலமுறை பயன்படுத்தக் கூடிய முக கவசங்கள் தமிழக காவல்துறை சார்பில் வாங்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு, கண்ணாடி கவசங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கொரோனா எனும் கொடிய நோயின் வீரியத்தை உணர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவேண்டுமென கேட்டுக் கொண்டார். ஏழை, எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்குவதை தடுக்கவில்லையெனவும், விதிமுறைகளை பின்பற்றி வழங்கலாம் என்றும்  ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Exit mobile version