தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் மேலும் ஆறாயிரத்து 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஆறாயிரத்து 426 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

அதில் மூவாயிரத்து 892 பேர் ஆண்கள் என்றும், இரண்டாயிரத்து 530 பேர் பெண்கள் என்றும், 4 பேர் திருநங்கைகள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 117 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 97 ஆயிரத்தைக் கடந்தது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, செங்கல்பட்டில் 540 பேருக்கும், திருவள்ளூரில் 382 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 927 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 73 புள்ளி 85 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 57 ஆயிரத்து 490 பேர் உள்ள நிலையில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 741 ஆக இருக்கிறது.

Exit mobile version