இந்தியாவில் ஒரேநாளில் 52,972 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 38 ஆயிரத்து 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 764 பேரும், டெல்லியில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 677 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேரும், உத்தர பிரதேசத்தில் 92 ஆயிரத்து 921 பேரும், மேற்கு வங்கத்தில் 75 ஆயிரத்து 516 பேரும், தெலங்கானாவில் 66 ஆயிரத்து 677 பேரும், குஜராத்தில் 63 ஆயிரத்து 562 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version