இந்தியாவில் ஒரேநாளில் 49,310 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 30 ஆயிரத்து 601 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 364 பேரும், கர்நாடகத்தில் 80 ஆயிரத்து 863 பேரும், ஆந்திராவில் 72 ஆயிரத்து 711 பேரும், உத்தரபிரதேசத்தில் 58 ஆயிரத்து 104 பேரும், குஜராத்தில் 52 ஆயிரத்து 477 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version