இந்தியாவில் ஒரேநாளில் 32,695 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 24 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 640 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 993 பேருக்கும், கர்நாடகாவில் 47 ஆயிரத்து 253 பேரும், குஜராத்தில் 44 ஆயிரத்து 552 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 41 ஆயிரத்து 383 பேரும், தெலங்கானாவில் 39 ஆயிரத்து 342 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், ஆந்திரா, மேற்குவங்கம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version