இந்தியாவில் ஒரேநாளில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது. 3 லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 லட்சத்து 92 ஆயிரத்து 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 24 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 346 பேருக்கும், கர்நாடகத்தில் 44 ஆயிரத்து 77 பேரும், குஜராத்தில் 43 ஆயிரத்து 637 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 39 ஆயிரத்து 724 பேரும், தெலங்கானாவில் 37 ஆயிரத்து 745 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், ஆந்திரா, மேற்குவங்கம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version