கடந்த 14 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

கொரோனா தொற்று இரண்டாம் கட்ட பரவலில், கடந்த 14 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், தமிழ்நாடு மாநிலம் முதலிடம் பிடித்து மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில், மே 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 804 பேரும், ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 464 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை 9 ஆயிரத்து 569 பேர் மட்டுமே தொற்றால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களிலும், கடந்த 14 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version