ஒசூர் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் தேர்தல் பிரசாரம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அண்ணா திமுக அமோக வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் போட்டியிடும் அண்ணா திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.

ஒசூர் சிப்காட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், புரட்சித் தலைவி ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், புரட்சித் தலைவி வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.

ஆனால் தேர்தலுக்கு முன்பு கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக விமர்சித்தார். பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றியை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version