உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுகவினர் வீரபாண்டியார் வாழ்க என கோஷம் எழுப்பியதால் சர்ச்சை

சேலம் விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுகவினர், வீரபாண்டியார் வாழ்க, வீரபாண்டியார் வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சேலம் மாவட்டம் சங்ககிரியில் விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 214 வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்காக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேலம் விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க வந்த திமுகவினர், கருணாநிதி, ஸ்டாலின் பெயரை கூறாமல், வீர பாண்டியார் வாழ்க வீர பாண்டியார் வாழ்க என கோஷமிட்டனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சேலம் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

Exit mobile version