காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பெண் தலைவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையை ஏற்படுத்திய இந்துமகா சபையின் பெண் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, உத்தரப்பிரதேசத்தின் நவ்ரங்காபாத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, பூஜா ஷகுன் பாண்டே உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பூஜா ஷகுன் பாண்டே மற்றும் அவரது கணவர் அசோஷ் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Exit mobile version