முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியைத் தாண்டியுள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடகா அணைகள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 71 ஆயிரம் கன அடியாக உள்ளது. உபரிநீர் முழுவதும் அணையின் 16-ம் கண் உபரி நீர் போக்கி வழியாக நீர் வெளியேறுகிறது. இது ரம்மியமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காண சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மேட்டூர் அணைக்கு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

Exit mobile version