திருவண்ணாமலையில் தொடர் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், நார்த்தாம்பூண்டி, நொச்சிமலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகப்பட்சமாக வந்தவாசியில் 11 சென்டி மீட்டரும், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தொடர்மழையால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விவசாயப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version