தொடரும் தேடுதல் வேட்டை: சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்கள் எங்கே?

கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை நான்காவது நாளாக, பெருங்குடி குப்பைக்கிடங்கில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் சந்தியாவின் இரண்டு கால்கள் வலது கை கடந்தமாதம் 21ஆம் தேதி கிடைத்தது. அதேபோன்று ஈக்காட்டுத்தாங்கல் கூவம் பகுதியில் கொலையாளி பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய இடத்தில் முட்டிக்கு மேலே இடுப்புக்கு கீழே உள்ள பகுதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் தற்பொழுது இடுப்பிற்கு மேல் உள்ள உடல் மற்றும் இடதுகையோடு கூடிய தலைப்பகுதியை பள்ளிக்கரணையில் ரேடியல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் போலீசார் நான்காவது நாளாக மோப்பநாய் உதவியோடு தீவிரமாக தேடி வருகின்றனர்.

உடலைப் தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். கொலை தொடர்பாக அனைத்து விவரங்களையும் தெரிவித்து விட்டதால் பாலகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலை கிடைத்தால் உறுதிப்படுத்த நீதிமன்ற அனுமதியோடு அடையாளம் காட்ட போலீஸ் காவல் கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version