மதுரையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

கடந்த டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் இறுதிப் பட்டியல் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வார்டுகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாக்குச்சாவடிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,வார்டு வரையறை இறுதி செய்யப்பட்டு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version