தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், தேர்தல் சிறப்பு டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில், திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், டிஐஜிக்கள், திருச்சி கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர்.

தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்தும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version