கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவைத் தேர்தலின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Exit mobile version