கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளின் படி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால், கொரோனா பாதிப்பு தொடர்பாகவும், அதன் தீவிரம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது தொடர்பான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர்களிடம் இருந்து முதலமைச்சர் பெறுகிறார்.

Exit mobile version