பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியுள்ளது.

தமிழகத்தில் நடப்புக்கல்வி ஆண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பம் செய்த 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் கலந்தாய்வு துவங்கியது. முதலாவதாக மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை தரமணியில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டு ஆணையை பெற்றனர்.

Exit mobile version