மக்களவை தேர்தலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், கூட்டணி அமைப்பது, பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, சட்ட ஒழுங்கு பிரச்சனை, பணப்பரிமாற்றத்தை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், தேர்தல் நடைபெறும் நாளன்று, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால், எவ்வாறு தேர்தல் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version