ரூ.1.50 கோடி மதிப்பில் ஈரோட்டில் புதிய பாலம் பணிகள் நிறைவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பாவனி வாய்க்காலின் குறுக்கே 50 ஆண்டுகளாக  குறுகிய பாலம் இருந்து வந்தது. இது வாகன் ஓட்டிகளுக்கு உகந்ததாக இல்லை எனவும், புதிய பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் பொது மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு பாலம் கட்ட 1கோடியே 50லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பாலம் கட்டும் பணிகளை நடத்தி வந்தது. இந்நிலையில் பாலத்தின் இறுதி கட்டப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் 4 ஆம் தேதி பாலம் திறக்கப்பட உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலம் அமைத்து கொடுத்த தமிழக அரசிற்கு ஊர் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version