கோவையில் மீடியா டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பந்தய சாலை பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மீடியா டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீடியா டவரின் உச்சியில் பொதுமக்களை கவரும் வகையில் சராசரியாக 8 புள்ளி 15 மீட்டர் சுற்றளவு மற்றும் 1 புள்ளி 70 மீட்டர் உயரமுள்ள காணொளி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குமாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version