பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 தலைமுறைக்கும் மேலான பழமை வாய்ந்த ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்ப்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆசாரி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பழைய வீட்டை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்ட போது ஆறு தலைமுறைக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள் தென்பட்டுள்ளன. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பழனிச்சாமி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஓலைச்சுவடிகளில் கோவில்களை கட்டும் கலை மற்றும் மனையடி சாஸ்திரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்து அங்கு குவியும் அப்பகுதி மக்கள் ஓலைச்சுவடிகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Exit mobile version