ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே, புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரசின் காரியக் கமிட்டி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும், வரும் 10ம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

Exit mobile version