அகமதாபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இந்த கூட்டம், புல்வாமா தாக்குதல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 58 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத் மாநிலத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதால் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அக்கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version