காங்கிரசுக்கு புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் : ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை ஏற்கனவே தலைமையிடம் கொடுத்துவிட்டதால், தான் காங்கிரசின் தலைவர் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்துவிட்டதால் புதிய தலைவரை விரைந்து தேர்ந்தெடுக்குமாறும், காங்கிரஸ் காரிய கமிட்டியை விரைவில் கூட்டுமாறும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார் எனினும் ராகுலின் ராஜினாமாவை ஏற்காத காங்கிரஸ் தலைவர்கள், அவர் தலைவர் பதவியில் தொடர்வார் என்றே கூறி வந்தனர். இந்நிலையில் ராகுல் வெளியிட்டிருக்கும் இந்தத் தகவலால் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version