காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா ராகுல்? :உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நாங்கள் ரத்து செய்ததாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா? என உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரவில் இறுதிக்கட்ட பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசியல் நிலைத்தன்மையை பாஜக உறுதி செய்திருப்பதாக கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை தாங்கள் ரத்து செய்ததாக குற்றம் சாட்டும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிப்பாரா? என அமித் ஷா கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி என அமித் ஷா குற்றம்சாட்டினார்.

Exit mobile version