பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த மூன்று வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாட்டு வண்டியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

டெல்லியில் இருக்கும் 200 பெட்ரோல் பங்குகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Exit mobile version