காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம்

தீபாவளியன்று 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசு தருவதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் காமராஜ் நகர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்குவதாக, என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார். ..

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகரின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக பார்வையிட்டு வருகிறார். ரெயின்போ நகரில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பதற்கு நன்றி எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய புவனேஸ்வரன், சாமி பிள்ளை தோட்டம் பகுதியில், காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு தீபாவளியன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு சிறப்பு பரிசு வழங்குவதாகக் கூறி டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version