காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பியான, உத்தரப்பிரதேசம் அமேதி ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மாநிலங்களவை எம்.பி. பதவியையும் இன்று ராஜினாமா செய்தார். டில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியில் தலைமையே இல்லை எனவும், தகவல் தொடர்பு என்பது முற்றிலும் சிதைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை எனவும், இன்றைய சூழலில் பிரதமர் மோடி நாட்டை சிறப்பாக வழி நடத்துவதாகவும் தெரிவித்தார். இன்று முறைப்படி பாஜகவில் தான் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மிகவும் செல்வாக்காகத் திகழ்ந்த சஞ்சய் சிங் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version