அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மிரட்டுகிறது காங்கிரஸ் -மோடி குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக ராஜஸ்தான் சென்றுள்ள அவர், அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அயோத்தி ராமர் கோயில் விசாரணையை தாமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் அறிவுறுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

தங்களுக்கு அடி பணியாத நீதிபதிகள் மீது இம்பீச்மென்ட் என்ற தகுதி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவோம் என காங்கிரஸ் மிரட்டுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். எந்த பயமும் இல்லாமல் நீதியின் பாதையில் நடக்குமாறு நீதித்துறையை கேட்டுக்கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.

 

Exit mobile version