ராஜஸ்தானில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யாரைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட உள்ளது. அதன்படி, முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Exit mobile version