பீகாரில் காங்கிரஸ் தலைமையில் அமையும் மெகா கூட்டணி

பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்தக் கட்சிகள் தயாராகி வருகின்றன.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்,அவரது கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவை அகற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், பீகாரில் மக்களவை தேர்தலுக்கான மெகா கூட்டணியை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

Exit mobile version