திருப்பதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாமி தரிசனம்

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுவாமி தரிசனம் செய்தார். விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், திருப்பதியில் அவர் சுவாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக திருப்பதி வந்த அவரை வரவேற்ற தேவஸ்தான நிர்வாகிகள், அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர். அவருடன் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version