அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டி

மக்களவை தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ள ராகுல்காந்தி, தற்போது வயநாட்டிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ள ராகுல்காந்தி, தனது பணியில் அப்பகுதி மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தேர்தலில் அவர் அங்கு தோல்வி அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version