கட்சியை வளர்ப்பதில் தான் காங்கிரஸ் ஆர்வம்: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

உத்தரப்பிரதேசத்தில், கட்சியை வளர்ப்பதில் தான் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டுவதாகவும், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கட்சி ஆர்வம் காட்டுவதில்லையென்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பிரியங்கா காந்தியின் வருகை, உத்தரப்பிரதேசத்தில், மும்முனை போட்டியை உருவாக்கும் என்றார். அவரால், காங்கிரஸ் கட்சி எந்தளவிற்கு பயனடையும் என்பதை, வரும் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.

Exit mobile version