மாநில கட்சிகளுடனான காங்கிரசின் கூட்டணி சுயநல அடிப்படையில் அமைக்கப்படுள்ளது – பிரதமர் மோடி

மாநில கட்சிகளுடனான காங்கிரசின் கூட்டணி சுயநல அடிப்படையில் அமைக்கப்படுள்ளது என்று, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் அவர் உரையாடினார். ஒரு கட்சியின் வெற்றி என்பது தலைவர்களின் முகத்துக்காக கிடைப்பது அல்ல எனவும், தொண்டர்களின் உழைப்பால் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலகட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்த பிரதமர் மோடி, பாஜக சாதாரண மக்களுக்கான கட்சி என்றார். வரும் காலத்தில் மதுரைக்கு மற்றொரு பெருமையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 

Exit mobile version