அதிமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்திருக்கும் வாழ்த்து செய்தியில், புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் 30 நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோரின் ஏழ்மையைப் போக்கிட உணவும், செல்வமும் வழங்கி சிறப்பு தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறக்கு உதவிபுரியுங்கள்; சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என குறிப்பிட்டிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்,

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தங்களது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version