திருப்பரங்குன்றம் வேட்பாளர் முதல்வரிடம் வாழ்த்து

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.முனியாண்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். முனியாண்டி, முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர். இதேபோன்று திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். முருகன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Exit mobile version