ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி!

ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆசிரியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற கொன்றை வேந்தனின் பாடல் வரிகளுக்கிணங்க, மாணவர்களுக்கு கல்வி செல்வத்தை போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள், எழுத்தறிவின் இறைவன் ஆவான் எனவும், அவர்கள் தெய்வ நிலைக்கு ஒப்பாக போற்றப்படுவதாகவும் புகழ்ந்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி, நல்லாசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கவுரவித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வருங்கால மாணவச் செல்வங்களுக்கு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவைகளை கற்றுக்கொடுத்து அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்நன்னாளில் உளம்கனிந்த ஆசிரியர்தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version