காங். எம்.பி. வசந்தகுமாரை ஓட்டு கேட்க ஊருக்குள் விட மாட்டோம்: புதூர் கிராம மக்கள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டிய காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமாரை, வாக்கு கேட்க ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வசந்தகுமார் தங்களுக்கு பல திட்டங்களை அறிவித்துவிட்டு, அதை செய்யாமல் ஏமாற்றி விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி எதையும் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்ட வசந்தகுமாரை வாக்கு கேட்க ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று புதூர் கிராம மக்கள் உறுதிபடத் கூறியுள்ளனர்.

Exit mobile version