தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் திமுகவினரிடையே மோதல்

தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் திருச்செந்தூர் திமுகவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஊராட்சி செயலாளர் ஒருவரின் வீடு உட்பட இரண்டு கார்கள் சூறையாடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தேர்தலுக்காக வழங்கிய பணத்தை பங்கு பிரிப்பதில் அப்பகுதி திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில், செட்டியாபத்து திமுக ஊராட்சி செயலாளரான சிவநாதனின் வீடு மற்றும் அவரது கார் உடைக்கப்பட்டது. அதேபோன்று பிரபாகரன் என்பவரது காரும் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version