மதுரை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதலை ஏற்படுத்திய 9 சிறைக் கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போராட்டமாக மாறியது. சிறை வளாகம் அருகே உள்ள சாலையில் கைதிகள் கற்களை வீசி எறிந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைத்துறை தலைவர், கைதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்துக்கு காரணமாக கூறப்படும் அருண், பெரியண்ணன், கண்ணன், பவித்ரன் உள்ளிட்ட 9 கைதிகள், திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறைத்துறை தலைவரின் உத்தரவின்பேரில் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

Exit mobile version