முன்விரோதம் காரணமாக இரு தரப்புக்கு இடையே மோதல்! ஒருவர் வெட்டிக்கொலை!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முன் விரோதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சொக்கானை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முனியசாமி என்பவரின் நாய் ,சண்முக வேலுவின் ஆடுகளை கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முனியசாமி தரப்பும் சண்முகவேல் தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த முனியசாமியின் தம்பி வில்வதுரை, மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சண்முகவேல், முத்துராமலிங்கம், கார்த்திக் ராஜா ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version