புதுச்சேரி அருகே இரு தரப்பு மீனவர்களிடையே இடையே மோதல்

புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் மோதலைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

புதுச்சேரி அருகேயுள்ள நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் நல்லவாடு மீனவர்கள் வைத்திருந்த வலையை வீராம்பட்டினம் மீனவர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனால் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். மோதலைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் வானத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து கடற்கரையோரத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version