டெல்லியில் இருதரப்பினர் இடையே மோதல் : மீண்டும் கலவரம்

டெல்லியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், மீண்டும் கலவரம் உண்டானது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, நேற்று டெல்லியில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து ஒரு தலைமைக் காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து டெல்லியின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியின் பஜன்புரா பகுதியில் இன்று இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது.

இதில் இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதே போன்று, டெல்லியின் மஜ்பூர் பகுதியிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version