காஷ்மீரில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பயங்கரவாதிகள் இடையே தகவல் பரிமாற்றத்தை தடுப்பதற்காக அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

Exit mobile version